முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் கைது!


முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரமித் ரம்புக்வெல்லவின் தந்தை, முன்னாள் அமைச்சர் தொடர்பான விசாரணையில் சந்தேக நபராக அவரைப் பெயரிட அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து நேற்று (மே 20) நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளிக்க இன்று புதன்கிழமை (மே 21) காலை இலஞ்ச ஊழல் ஆணைக் குழு முன் ரமித் ரம்புக்வெல்ல முன்னிலையானார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் பிரதிவாதி வழக்கறிஞர் இருவரின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஊழல் தொடர்பான புகார்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் திங்கட்கிழமை சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

No comments